திங்கள், 26 செப்டம்பர், 2016

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 4

அமரரான கவிமணி

                                            


செப்டம்பர் 26. கவிமணியின் நினைவு தினம்.




முதலில்,

 1954-இல் அவர் மறைந்ததும் ‘விகட’னில் வந்த கட்டுரை.
====

'கவிஞர் இறந்து போய்விட்டார்; கவிஞர் வாழ்க' என்று புதிர் போடுவதுபோல் சொல்லிக்கொண்டே ஒருவர், பல்லாண்டுகளுக்கு முன் சில குழந்தைப் பாடல்களை வாசித்துக் காட்டினார். தமிழகத்தின் தெற்குக் கோடியில் நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமத்திலிருந்த ஒருவர் பாடி, ஒரு புனைபெயரில் வெளியிட்டிருந்த பாடல்கள் அவை. உடனே அங்கிருந்த ரஸிகர்கள் ஒருமுகமாக, 'உண்மைதான். கவி பாரதி மறைந்துவிட்டார்; இந்தப் புதுமைக்கவி வாழ்க' என்று வியந்து பாராட்டினார்கள். அந்தக் குக்கிராமவாசிதான் பல வருஷங்களுக்குப் பின் 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' என்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தமிழர் தங்கியிருக்கும் நாடுகளிலும், வட இந்தியப் பிரதேசங்களிலும் பேரும் புகழும் பெற்றவராகி, இன்று புகழுடம்பு பெற்றிருக்கிறார்.

திருவனந்தபுரம் மகாராஜா - பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்த் தலைமைப் புலவராகத் தொண்டாற்றி, 1931-ல் ஓய்வு பெற்றுத் தேசிக விநாயகம் பிள்ளை நெற்பயிரின் வளர்ப்புப் பண்ணையான நாஞ்சில் நாட்டிலே தமிழ்ப் பயிர் வளர்த்து வந்தார். சிறந்த புலமைத்திறனும், ஆராய்ச்சித் திறனும் உள்ளவர். சேரர் வரலாறு குறித்தும், பாண்டியர் வரலாறு குறித்தும் கல்வெட்டுக்களிலிருந்து பல அரிய செய்திகளைக் கண்டு பிடித்து அவர் வெளியிட்டதுண்டு. எனினும், கவிமணியாகவே இவர் பெயர் நிலைநிற்கும், சரித்திரத்தில்!

கன்னியாகுமரிக்குப் பக்கத்தி லிருந்து இவரது கவி மலர்களைத் தமிழ்த் தென்றல் நாடெங்கும் சிதறியது. இம்மலர்கள் கடல் தாண்டி இலங்கை, பர்மா, மலாய் நாடு முதலான வெளி நாடுகளிலுள்ள தமிழர் வாழ்விற்கும் மணமும், அழகும் தந்தன. பல தமிழ்ப் பத்திரிகைகளும் போட்டியிட்டு இவரை அறிமுகப்படுத்த முயன்றன. இம் முயற்சிகளில் விகடனுக்குச் சிறப் பான பங்குண்டு. 'மலரும் மாலை யும்' என்ற புத்தக வடிவில் பாடல்கள் வெளிவருவதற்கு முன்பே, 1940-ல் 'கவிமணி' என்னும் பட்டம் கிடைப்பதற்கு முன்பே, இவர் பெயர் பிரசித்தமாகிவிட்டது.


பழந்தமிழ் இலக்கியத்திற்கும் இன்றைய தமிழுக்கும் பொற்பாலமாக அமைந்திருப்பவர் கவிமணி. இவருக்குச் சாவேது? சாகாவரம் பெற்ற கவிதையிலே இவர் அமர வாழ்வு வாழ்கின்றார்; இவரது மணிவாக்கு ஒலி செய்தவண்ணமாகவே இருக்கும்.

[ நன்றி: விகடன் ]


இரண்டாவதாக,

அவர் மறைந்ததும், ”கலைமகள்” பல கட்டுரைகளை வெளியிட்டது. அப்போது வந்த ஒரு பக்கம்:



[ நன்றி: கலைமகள் ] 

கடைசியாக,

’கல்கி’ எழுதிய அஞ்சலிக் கட்டுரை:

( இதை எழுதிய சில மாதங்களுக்குப் பின் டிசம்பரில்  ‘கல்கி’யே காலமாகி விடுகிறார்.)


[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள் :

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


கருத்துகள் இல்லை: