திங்கள், 12 டிசம்பர், 2016

சக்ரவர்த்தினியில் பாரதி - 2

துளஸீபாயி 


’சக்ரவர்த்தினி’ என்ற பெயர் அந்தக் காலத்தில் பிரபலமாய் இருந்த ‘க்வீன்’ ( அரசி) என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தழுவியதாய் இருக்க வேண்டும் என்பர்.


இதோ ஒரு ‘சக்ரவர்த்தினி’ இதழின் முதல் பக்கம் .


இது மாதர் பத்திரிகையானதால், பாரதி பல மாதர் முன்னேற்றக் கட்டுரைகளை அதில் எழுதினார்.

கவிஞன் ‘ஷெல்லி’மேல் பற்றுடைய பாரதி, ‘ஷெல்லிதாஸ்’ என்ற பெயரில் ‘துளஸீபாயி’ என்ற தலைப்பில் ஒரு ரஜபுத்திர மங்கை பற்றி ஒரு சிறுகதை எழுதினார்; ஐந்து இதழ்களில் வந்த கதை.  தமிழில் வந்த முதல் சிறுகதை என்றும் பலர் இதைக் குறிப்பிடுவர்.

அதிலிருந்து ஒரு சிறு பகுதி. ‘ஸதி தகனம்’ நடக்க விடாமல் ஒரு ரஜபுத்திரக் கன்னிகையைக் காப்பாற்றுகிறான் அக்பரின் சேனைத் தலைவனான ஒரு மகம்மதியன்.




இந்தக் கதையில் வரும் ஒரு கவிதை ( பாரதி இயற்றினதாய் இருக்கவேண்டும்.)

மந்த மாருதம் வீசுறும் போதினும் 
   வானில் மாமதி தேசுறும் போதினும்
கந்த மாமலர் கண்ணுறும் போதினும்
   கான நல்லமு துண்ணுறும் போதினும்
சந்த மார்கவி கற்றிடு போதினும் 
   தாவில் வான்புகழ் பெற்றிடு போதினும்
எந்த வாறினு மின்புறு போதெலாம்
   என்ற னெஞ்சகம் ஏந்திழை பாலதே.


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை: