புதன், 22 பிப்ரவரி, 2017

கஸ்தூரிபாய் காந்தி -1

கஸ்தூரிபாய் மறைந்தார்! 

[ நன்றி: விகடன் ] 

பிப்ரவரி 22. கஸ்தூரிபாய் நினைவு தினம்.

1944-இல் அவர் காலமானவுடன் வந்த சில தலையங்கங்கள்.

முதலில், ‘சக்தி’ மார்ச் 44 இதழில் வந்த தலையங்கம்.


 இரண்டாவதாய், ஆனந்த விகடனில் வந்த தலையங்கம்:

சோக வெள்ளம்

காந்திமகான் பொறுமையின் சிகரமாக விளங்குபவர். வாழ்க்கையில் ஏற்படும் துன்ப துயரங்களை யெல்லாம் சகித்துக்கொள்ளும் ஆற்றலுடையவர். இத்தகைய மகாத்மாவே கண்ணீர் விடும்படியான சம்பவம் நேர்ந்துவிட்டதென்றால், சாதாரண மக்களின் துக்கத்துக்கு ஓர் எல்லைதான் ஏது? பூனா நகரின் அருகாமையிலுள்ள ஆகாகான் மாளிகைச் சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, தேசத்தின் அன்னையாக விளங்கிய கஸ்தூரிபாய் அம்மையார் காலமான செய்தியை நினைக்கும்போதெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது.

அன்று, வனவாசத்திற்குப் புறப்பட்ட ராமனை பின்பற்றிச் சென்ற சீதையைப் போல், சிறை வாசத்திற்குப் புறப்பட்ட காந்தி மகானைப் பின்தொடர்ந்து கஸ்தூரிபாயும் 1942-ல் சிறைவாசம் ஏற்றார். முதுமைப் பருவத்தில் இந்தத் தியாகத்தை மேற்கொண்டதற்குப் பலனையும் அடைந்தார்!

ஏற்கெனவே, மகாதேவ தேசாயைப் பிரிந்து மனம் வாடிய காந்திமகானுக்கு, கஸ்தூரிபாய் அருகிலிருந்தது ஆறுதலாயிருந்திருக்கும். இன்று அந்த ஆறுதலும் அவருக்கு இல்லாமற் போய் விட்டது. இதைக் குறித்து, ஞானியான மகாத்மாவே மனம் கலங்குகிறாரென்றால் அவரைத் தேற்றுவதற்கு வேண்டிய தகுதி யாருக்கு இருக்கிறது? எனவே, இந்தச் சம்பவத்தின் பலனாக மகாத்மா மனத்தளர்ச்சி பெறாமல் அவரைப் பாதுகாக்கக் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்!

கடைசியாய், 1964-இல் ‘பரணீதரன்’ விகடனில் கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றி எழுதிய தொடரில் ‘மாயா’ ( மகாதேவன்) வரைந்த ஓர் அழகு  ஓவியம்.


[ நன்றி: சக்தி, விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கஸ்தூரிபாய் காந்தி

1 கருத்து:

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

நல்ல நினைவேந்தல். தொடருங்கள்