செவ்வாய், 22 ஜனவரி, 2019

1222. பண்படும் சங்கீதமே : கவிதை

பண்படும் சங்கீதமே
பசுபதி



எத்தனை சுரங்களோ எத்தனை உறழ்ச்சிகள் 
. எத்தனை ராகங்க ளோ?
அத்தனின் இணையடி அருள்தனைப் பெற்றிட
. ஆக்கிய பாடல்க ளோ? 
வித்தகம் உள்ளவர் மேடையில் பாடினால்
. வித்தைகள் விண்ணேறு மே.
பத்தியும் பாவமும் பளிச்சிடும் பாடலால்
. பண்படும் சங்கீத மே. 


தொடர்புள்ள பதிவுகள் :


கருத்துகள் இல்லை: