புதன், 9 ஜனவரி, 2019

1212. தகதிமி நடனம் ; கவிதை

தகதிமி  நடனம்
பசுபதி


சுகந்தரும் குரல்குழல் முழவுடன்
. சுருதியும் செவிகளில் இசைக்கவே 
துகில்களின் அடுக்குடை ஜரிகைகள்
. சுடொரொளி நகைகளும் ஜொலிக்கவே
மகிழ்வுறும் குருகரம் லயவழி
. மகளிரின் பதசரம் ஒலிக்கவே 
தகதிமி  நடனமென் விழிகளில்
. தமனியப் படமென ஒளிர்ந்ததே 

தொடர்புள்ள பதிவுகள் :


கருத்துகள் இல்லை: