ஞாயிறு, 15 ஜூலை, 2018

1119. பாடலும் படமும் - 38

இராமாயணம் - 10
சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.




பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து
                             பொங்கி,
மெய்யுறவெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை
                            விட்டான்;
ஐயனுக்கு, அங்கி,முன்னர், அங்கையால் பற்றும்
                            நங்கை
கை எனல் ஆயிற்றுஅன்றே-கை புக்க மணியின்
                            காட்சி !

கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச் சூடாமணியின் தோற்றம்; 

ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த இராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்;

அம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால் பிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்)  

பயந்த காமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி - (அதனால்) உண்டான ஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; 

மெய் உற வெதும்பி - உடல் நன்றாய் வெப்பமுற்று; 

உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான் - மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான் ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: