ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

1149. பாடலும் படமும் - 45

இராமாயணம் - 17
யுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்


[ ஓவியம்: கோபுலு ]

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ?


[ இலக்குவற்கு   முன்  வீடணன் புகும் - இலக்குவனுக்கு
முன்னர் வீடணன் செல்வான்; 
இருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் - அவ்விருவரையும்  விலக்கி  விட்டு  வாலி மகன் அங்கதன்   முன்  புகுவான்;  
அவனையும்  விலக்கி  வானரக் காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம் சுக்கிரீவன்  முந்துவான்;  
அனுமன் முன்  கடுகும்  - அனுமன் விரைந்து செல்வான்; 
அலக்கண் அன்னதை  -   அப்படிப்பட்ட துன்பத்தை; 
இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது என்று கூற முடியுமா? ]

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: