சனி, 8 செப்டம்பர், 2018

1152. பாடலும் படமும் - 46

இராமாயணம் - 18
யுத்த காண்டம், மீட்சிப் படலம்

[ ஓவியம்: கோபுலு ]

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை, 

பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை 

தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை, 

அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். 


[ அத் தலைவனும் - அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்;
கற்பினுக்கு அரசினை- கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக 
உள்ளவளை; 
பெண்மைக் காப்பினை- பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாக உள்ளவளை; 
பொற்பினுக்கு அழகினை- அழகிற்கு அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை- புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை; 
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை - தனி நாயகனாகிய
தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை; 
அற்பின்- அன்பினால்; 
அமைய நோக்கினான் - நன்றாகப் பார்த்தான்.]

 மர்ரே ராஜம் ‘கம்பராமாயணம்’ நூல்களின் அட்டைகளில் வந்த 18 படங்களைக் கொண்ட இந்தத் தொடர் இத்துடன் நிறைவேறுகிறது.) 

[ பொருத்தமான பாடல்களுக்கு நன்றி: அமுதசுரபி தீபாவளி 
மலர் 2004

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: