வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ரா.கி.ரங்கராஜன் - 4: ‘கல்கி’யின் முத்திரை!

’கல்கி’யின் முத்திரை!

ரா.கி.ரங்கராஜன்

”ஒரு விஷயத்தில் எனக்கு ரொம்ப வருத்தம், சார்” என்றேன் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களிடம்.

எஸ்.ஏ.பி

அவர் “ என்ன வருத்தம்? “ என்று உடனே கேட்கவில்லை. மௌனமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். அவரது இதயம் துயரத்தால் கனக்கிறது என்று ஊகித்துக் கொண்டேன். ஏனெனில் கல்கி காலமான செய்தியைக் கேட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.

வெகு நேரத்துக்குப் பிறகு “என்ன வருத்தம்? என்று எஸ்.ஏ.பி. கேட்டார்.

“இந்த மனிதர் கல்கி பத்திரிகைத் துறையில் எத்தனை புதுமைகள் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்து விட்டார். நமக்கு எதுவும் பாக்கி வைக்கவில்லை. தலையங்கம், கார்ட்டூன், சினிமா விமர்சனம், சங்கீத விமர்சனம், பிரயாணக் கட்டுரை, விகடத் துணுக்கு, சிறுகதை, தொடர்கதை --இப்படி ஒரு பத்திரிகைக்கு என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமோ அவ்வளவும் செய்து முடித்து விட்டார். புதிதாக நாம் செய்வதற்கு இனிமேல் எதுவுமே இல்லாமல் போய்விட்டது, பாருங்கள். அதுதான் வருத்தம். எது செய்தாலும் அவரைக் காப்பி அடித்ததாகவே இருக்கும், “ என்றேன்.

கல்கி

“ஒருவகையில் உண்மைதான், “ என்று ஒப்புக் கொண்டார் எஸ்.ஏ.பி. “ஆனால், அதற்காக வருத்தப் படத் தேவையில்லை. கல்கி ஒரு பிரமாதமான வழிகாட்டி. அற்புதமான இன்ஸ்பிரேஷன் கொடுத்தவர் அவர். அவர் ஆரம்பித்த அதே அம்சங்களை வேறு வேறு விதமாக, புதிய புதிய வடிவத்தில் நாம் செய்ய முடியும் . எல்லாத் தமிழ் பத்திரிகைகளும் இனிமேல் அப்படித்தான் செய்யப் போகின்றன. புதுமையும் இருக்கும். அதில் கல்கியின் முத்திரையும் இருக்கும், “ என்றார்.

அது சத்தியமான அபிப்ராயம். இன்றைக்கு எந்தப் பத்திரிகையில் எந்தப் புதிய அம்சத்தைப் பார்த்தாலும், அதன் மூலத்துக்கு மூலத்துக்கு மூலத்தை ஆராய்ந்தால் கல்கி செய்ததாகத்தான் இருக்கும்.

 [ நன்றி: ‘கல்கி’]

தொடர்புள்ள பதிவுகள்:
ரா.கி.ரங்கராஜன்

4 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

அந்தக்காலத்தில் படித்தது நினைவில் இருந்தாலும், உங்களுடைய வலைப்பூவில் மறுப்டியும் படிப்பது ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

Latha Sukumar சொன்னது…

Inspirational! - Latha Sukumar

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சத்தியமான அபிப்ராயம்....

சாத்தியமான கனவுகள்..

அருமையான பகிர்வுகள்..
பாராட்டுக்கள்..!

Anand சொன்னது…

உண்மை.