ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

2076. பாடலும் படமும் - 144

இராமாயணம் - 23

அயோத்தியா காண்டம் - 2




எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் நான்காம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.
पादुके त्वभिषिच्याथ नन्दिग्रामेऽवसत्तदा।
स वालव्यजनं छत्रं धारयामास स स्वयं।

 The basic meaning of this sloka is :

Bharata coronated the sandals and lived at Nandigrama longing for the return of Rama. Bharata reported everything relating to the kingdom to the sandals first. Waving the chamaras (a fan made of yak tail) himself, he held the royal parasol over them.

கம்பன்

நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந்தனிக் கோல்முறை செலுத்த, சிந்தையான் 
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் 
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்

அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் - இரவும் பகலும்
ஓயாமல் அழுதுகொண்டுள்ள நீர் நீங்காத கண்ணை உடையனாய் (பரதன்);
நந்தியம் பதியிடை- நந்திக்கிராமத்திடத்தே; 
நாதன் பாதுகம்- இராமன் திருவடிநிலை; 
செந்தனிக் கோல் முறைசெலுத்த - செங்கோல் முறையைச்
செய்ய; 
சிந்தையான் - மனத்தினால்; 
இந்தியங்களை - ஐம்பொறிகளையும்;
அவித்து - புலனின்பம் நுகராதவாறு அடக்கி; 
இருத்தல் மேயினான் - அங்கேயே தங்கியிருத்தலைப் பொருந்தினான்.


[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம் 

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: