செவ்வாய், 10 டிசம்பர், 2013

சொல்லயில் : கவிதை

சொல்லயில் 
பசுபதி





சென்னையில் பாரதி இல்லத்தில் நடந்த 'வானவில் ' பாரதி விழாவில்  இந்தப் பாடலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

கவிஞர் வேழவேந்தன் தலைமை. 
====

கந்தன் மொழியை வேலன் பேரில் 
. . காக்க வந்த சொல்லயில்;
இந்தி யக்க விஞர் வானில்
. . என்றுங் கூவும் பூங்குயில்.
சிந்து வேந்தர் பார திக்கென்
. . சென்னி என்றும் தாழுமே!
. . . செந்த மிழ்க்க விக்கு முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (1)

சொல்லில் தமிழை ஊற வைத்த
. . சுப்ர மண்ய பாவலன் ;
அல்ல லுற்ற பார தத்தின்
. . ஆன்ம ஞானம் ஆர்த்தவன்.
ஷெல்லி தாசன் முன்னர் என்றன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . செக்கி ழுத்த செம்மல் நண்ப!
. . . சென்னி என்றும் தாழுமே! (2)

மின்னும் கண்கள் வீரம் ஒளிரும்
. . மீசை, பாகை உருவினன் ;
கண்ணன் கழலை நண்ணும் கைகள்
. . கனலில் நீட்டும் காதலன்.
சென்னை செய்த வப்ப யன்முன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . சித்தன் சக்தி பித்தன் முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (3)


~*~o0o~*~

*அயில்=வேல்

[ டிசம்பர் 15, 2002 “திண்ணை” இதழில் வெளியான கவிதை ]

தொடர்புள்ள பதிவுகள் :

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

பதிவுகளின் தொகுப்பு: 176 – 200

பதிவுகளின் தொகுப்பு: 176 – 200




176. பதிவுகளின் தொகுப்பு: 151 – 175
177. தேவன் - 6: ராஜகிரி ரஸ்தா
178. தேவன் - 7: ஆறுதல் வேண்டுமா?
179. தேவன் - 8: ‘கல்கியில் ஒரு தேவன்பக்கம்!
180. தேவன் - 9: தேவன் நூற்றாண்டு விழா -1
181. தேவன் - 10: தேவன் நூற்றாண்டு விழா -2
182. தேவன் - 11 : தேவன் நூற்றாண்டு விழா -3
183. சசி -7 : பொதுஜன சேவை
184. தேவன் - 12: சாப்ளின் தமிழன் தேவன்!
185. லா.ச.ராமாமிருதம் -5: சிந்தா நதி – 5
186. பாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1
187. லா.ச.ராமாமிருதம் -6: சிந்தா நதி – 6
188. தேவன் - 13 : தேவன் நூற்றாண்டு விழா -4 : ‘கலைமகள்’ ...
189. தென்னாட்டுச் செல்வங்கள் – 10
190. சங்கீத சங்கதிகள் – 19
191. திசைமாற்றிய திருப்பங்கள் : கவிதை
192. ராமன் விளைவு : கவிதை
193. கொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்
194. தேவன் - 14 : தேவன் நூற்றாண்டு விழா -5 : ’தினமணியி...
195. தேவன் - 15: ‘அம்பையின் கட்டுரை
196. சாவி - 9: ’சிக்கனம்சின்னசாமி
197. இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ
198. இந்த மண் பயனுற வேண்டும் : கவிதை
199. சங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை
200. கல்கி -5: தமிழுக்கு ஒருவர்!
http://s-pasupathy.blogspot.com/2013/12/5.html

தொடர்புள்ள பதிவுகள்:

பதிவுகளின் தொகுப்பு

வியாழன், 5 டிசம்பர், 2013

கல்கி -5 : தமிழுக்கு ஒருவர்!

தமிழுக்கு ஒருவர்! 
மீ.ப.சோமு



டிசம்பர் 5, 1954. பேராசிரியர் ‘கல்கி’ மறைந்த தினம்.


டிசம்பர் 12, 1954 -ஆம் தேதி வெளிவந்த ‘கல்கி’ இதழ்  பேராசிரியர் ‘கல்கி’ பற்றிய உருக்கமான பல அஞ்சலி மலர்களைத் தாங்கி நின்றது. ராஜாஜி, ம.பொ.சி,  சாவி, ’கல்கி’யின் பல துணை ஆசிரியர்கள், மதுரை மணி ஐயர், காருகுறிச்சி அருணாசலம் என்று பற்பல பிரபலங்களின் கட்டுரைகள், கடிதங்கள் அவ்விதழில் இருந்தன.  பல இரங்கற் கவிதைகளும் அவ்விதழை துயரத்தில் ஆழ்த்தின. அவ்விதழில் வந்த கட்டுரைகளில் பலவும் பின்பு சுப்ர.பாலன் தொகுத்த, “ எழுத்துலகில் அமரதாரா”  என்ற கல்கி நூற்றாண்டு சிறப்பு வெளியீட்டில் வந்தன. ஆனால், அவ்விதழில் வந்த கவிதைகள் ? முக்கியமான தலையங்கம்? எனக்குத் தெரிந்து இவை எந்த நூலிலும் பதிவு செய்யப் பட்டனவாய்த் தோன்றவில்லை. அதனால் அவற்றுள் சிலவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். மேலும், இன்று கல்கி நினைவு தினம் அல்லவா?

முதலில், கவிதைகளிலிருந்து சில பகுதிகள்:

புத்தனேரி ரா. சுப்பிரமணியனின் “ஹாஸ்ய ஜோதி” என்ற இரங்கற் கவிதை:

மாய்ந்ததே வசன மேதை!
  மறைந்ததே ஹாஸ்ய ஜோதி!
காய்ந்ததே தமிழ்ப்ப்பூஞ் சோலை!
  கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம் 
  உடைந்ததே, கண்ணீர் வெள்ளம்
பாய்ந்ததே கல்கி வைத்த
  பயிரெலாம் செழிக்கு மாறே! 

( புத்தனேரி சுப்பிரமணியன் ஒரு நீண்ட இரங்கற் கவிதையை அந்த வார “ஆனந்த விகட”னிலும் எழுதினார்.)

54-இல் முதலில் ரசிகமணி டி.கே.சி, பிறகு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மறைந்ததைச் சுட்டிச் சுத்தானந்த பாரதியார் சதாசிவத்திற்கு 7-12-54 என்ற தேதியிட்ட ஒரு கடிதத்தை வடலூரிலிருந்து அனுப்பி இருந்தார்:  ’கதைமணி’ கல்கிக்கு அஞ்சலியாய் அக்கடிதத்தில் இருந்த ஒரு வெண்பா இதோ:

கதைமணி கல்கி !

கம்ப ரசிகமணி கண்ணாங் கவிதைமணி 
இன்பக் கதைமணியும் ஏகினரோ -- உம்பரிலே
மூவர்க்கும் மூச்சான முத்தமிழின் பாநயத்தைத்  
தேவர்க்குஞ் சொல்லத் தெளிந்து! 

“கற்பனைச் சிற்பி” என்ற தலைப்பில் வந்த ஏ.கே.பட்டுசாமியின் கவிதையிலிருந்து ஒரு பகுதி:

சிந்தையைத் தூண்டும் சிறுகதைகள் - முதல்
  சீரிய பற்பல கட்டுரைகள் 
முந்தைத் தமிழக மேன்மையைச் சாற்றிடும்
  முடிமணியாகிய நீள்கதைகள் 

காவியங்கள் எழுத்தோவியங்கள் - நல்ல 
  கருத்துச் செறிந்த விமர்சனங்கள்
ஆவிபிரியும் வரையில் எழுதிய 
  அற்புதக் கற்பனைச் சிற்பியவன் ! 

“பாரதீயன்” என்பவர் எழுதிய ”வாடாத தனி மலர்” என்ற கவிதையின் ஒரு பகுதி:

பாரதியார் கவிப்பெருமை பாரில் உள்ளார்
  பற்பலரும் அறிதற்குப் பணிகள் செய்தார் 
ஊரறியக் கலைஞர்களை ஊக்கி இந்த 
  உலகெல்லாம் அறிவித்த உண்மை யாளர் !

எத்தனையோ பெருங்கதைகள் எழுதி வைத்தும்
  எண்ணரிய சிறுகதைகள் இயற்று வித்தும்
வைத்தபெரு மதிப்புலவர் வரிசை உள்ளே
  வாடாத தனிமலராய் வாழ்வார் கல்கி!  

“கல்கி” மறைந்ததும் ,  ’கல்கி’ பத்திரிகையின் ஆசிரியராய்ப் பணிபுரியும் தகுதி யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி/கவலை உடனே எழுந்தது. ஒரு கணமும் யோசிக்காமல், ராஜாஜி மீ.ப.சோமுவைத் தேர்ந்தெடுத்தார்.  அகில இந்திய ரேடியோவில் உயர்பதவி வகித்த சோமு, இரு பதவிகளையும் சில காலத்திற்கு ஏற்று நடத்த மத்திய அரசு விசேஷ அனுமதி வழங்கியது. பதினெட்டு மாதங்கள் சோமு ‘கல்கி’யின் ஆசிரியராய் இருந்தார்; அப்போது பல முறை ‘கல்கி’யைப் போற்றிக் கட்டுரைகள் எழுதினார். ஆனால், ’கல்கி’க்கு அஞ்சலி என்ற முறையில் ‘கல்கி’யில் சோமு அவர்கள் முதலில் எழுதியது டிசம்பர் 12-ஆம் தேதி இதழுக்கு வரைந்த  தலையங்கம் தான். கட்டுரையின் சிறப்புக் கருதி,  ’கல்கி’யை நன்கு அறிந்த சோமு அவர்களின் அந்த முழுத் தலையங்கத்தை இங்கிடுகிறேன்.

( அந்த சமயத்தில், “ஆனந்த விகடனி”லும் ஓர் அருமையான தலையங்கமும் , எஸ்.எஸ்.வாசனின் கையெழுத்து உள்ள ஒரு உருக்கமான “உபயகுசலோபரி”யும் வந்தன என்பதை இங்குக் குறிப்பிடத் தான் வேண்டும். அவற்றின் சில பகுதிகளை வேறொரு மடலில் பிறகு இடுகிறேன்.)

இப்போது மீ.ப.சோமு அவர்கள் எழுதிய தலையங்கம்:




[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவு:

கல்கி படைப்புகள்

கல்கியைப் பற்றி


புதன், 4 டிசம்பர், 2013

சங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை

சங்கத் தமிழ்வளர்த்த நங்கை
பசுபதி



[ Picture Source : Wikipedia ] 

கோபுர தரிசனம்2013 தீபாவளி மலரில் வெளியான கவிதை.



சங்கத் தமிழ்வளர்த்த நங்கை


பண்டைத் தமிழகத்தின் பாவலர்கள் பலர்நடுவில்
வண்டமிழ் ஒளிபரப்பும் மங்கைமணி ஒருவருண்டு.
சங்கத் தமிழ்வளர்த்த நங்கையந்த ஔவையின்
மங்காப் புகழ்மழையில் மனம்நனைப்போம்; மகிழ்வுறுவோம்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றாலும்
மற்றோரைப் புழ்ந்திடுவோர் வையகத்தில் ஒருசிலரே.
பரணரென்ற பெரும்புலவர் தரமறிந்து புகழவ்வை
பெருமையைப் போற்றிடுவோம்; கரங்களைக் குவித்திடுவோம்.

புலவரவ்வை சென்றிருந்தார் புரவலனின் அவைக்களம்;
பலமணிகள் காத்திருந்தும் பரிசொன்றும் கிட்டவில்லை.
ரவுத்திரம் பழகென்ற புதுமொழிக் கிலக்கணமாய்
அவதாரம் அன்றெடுத்தார் ஔவைப் பிராட்டியார்!
தனைமறந் தானோ?வேந்தன் எனைத்தான் அறியானோ?
வனத்திலோர் மரமிலையா மழுவேந்து தச்சருக்கு?
வித்தையுண்டு என்கையில்!வீறுகொண்டு கூவினார்.
எத்திசையில் சென்றாலும் எமக்குண்டு சோறென்ற
செருக்குள்ள புலமைமுன்நம் சிரங்களைத் தாழ்த்திடுவோம்!
அறச்சீற்றம் அன்றுகண்டோம்; ஆனந்தம் இன்றுமுண்டு!

அதியனுடன் போர்தொடுக்க ஆசைகொண்டான் தொண்டைமான்;
அதையறிந்த ஔவையார் அங்குச்சென்றார்; தொண்டையனின்
போர்க்கலங்கள் குவியல்கண்ட புலவர் புகழ்ச்சியென்னும்
போர்வையுள்ள பாடலொன்றால் புத்திமதி புகட்டினார்.
பார்வையிட்ட வேல்வாள்கள் பளபளத்தல் புகழ்ந்தார்!
போரறிந்த படைக்கலங்கள் கூர்மின்னு மாஎன்ன?
புரிந்துகொண்ட தொண்டைமான் போர்தொடங்கா முடிவுசெய்தான்.
அரசியலில் பாடலொன்றால் ஔவைசெய்த புரட்சியிது!
பார்வரலா றின்றுவரை பாராத அருமையது!
போர்மேகம் விரட்டுகவிப் புயலவ்வை பெருமையிது!

                   (வேறு)
துங்க நெல்லி பெற்ற அவ்வை தூது சென்று பண்டைநாள்
அங்க தத்தால் போர்நி றுத்தி அற்பு தம்நி கழ்த்தினாள்.
சங்க கால அவ்வை முன்பெம் தலைகள் என்றுந் தாழுமே
தங்க மான பாக்கள் தந்த நங்கை நினைவு வாழுமே!  

=========================  


தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

இந்த மண் பயனுற வேண்டும் : கவிதை

இந்த மண் பயனுற வேண்டும்
பசுபதி

”சண்முக கவசம்” என்ற மாத இதழின் 2013 தீபாவளி மலரில் வெளியான என் கவிதை.


கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில்
. . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்;
ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை
. . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும்.
வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி
. . வாய்கிழியும் அரசியல் வாதிகள் ஒதுக்கி
ஏழ்மையெனும் இருளதனை இல்லையெனச் செய்யும்
. . இளைஞரால் இந்தமண் பயனுற வேண்டும்.

விதவிதமாய் வண்ணங்கள் விரித்தாடும் வெண்மை
. . வேற்றுமையுள் ஒற்றுமை மிளிர்ந்திடும் உண்மை;
இதயங்கள் அனைத்திலுமே இரத்தநிறம் சிவப்பு;
. . இறையொன்றே என்றிட ஏன்மிகக் கசப்பு ?
மதமென்னும் புதரினிலே மறைந்திருந்து வெறியை
. . வளர்த்துவிடும் தீவிர வாதிகள் விலக்கி
மதஇனநல் இணக்கமெனும் மரத்தினிலே மலரும்
. . மக்களால் இந்தமண் பயனுற வேண்டும்.

தொன்மரபை, செந்தமிழின் சொல்லழகைத் துகைக்கும்
. . தொலைக்காட்சித் தொல்லையைத் தொலைப்பவர் வேண்டும்.
இன்னிசையும் இலக்கியமும் இறவாமல் காக்கும்
. . இலக்குடனே இல்லறம் ஏற்பவர் வேண்டும்.
சின்னதென்றும் பெரியதென்றும் செந்தழலில் உண்டோ ?
. . சீரழிக்கும் சிறுதிரைப் பெட்டியைத் தவிர்த்துப்
பண்பாட்டுப் பழந்தேனைப் பாலோடு புகட்டும்
. . பாவையரால் இந்தமண் பயனுற வேண்டும். 
====
தொடர்புள்ள பதிவுகள் :